கமலுடன் ஒரு மாலை!


எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற
வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.

இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.

வைரமுத்து வீட்டு திருமணத்தின்போது இந்த வாரம் சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். புதன்கிழமை (25.6.2008) மாலையின், நானும், நூற்றாண்டை கடந்து விட்ட அல்லயன்ஸ் தமிழ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் போயிருந்தோம். வழக்கம் போல ஸ்ரீனிவாசன் கமலுக்கு கொடுக்க ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார். இம்முறை ஏராளமான ஆன்மிக புத்தகங்கள்.

தன்னுடைய அலுவலக அறையில் லாப் டாப் போன்ற ந்வீன கருவிகள் சூழ அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ஏராளமான புத்தகங்கள்.புன்முறுவலோடு வரவேற்றார்.`தசாவதாரம்' பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது எங்களது அன்றைய மாலை சந்திப்பு. `படத்தைப் பத்தி பல விதமான விவாதங்கள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனால் இப்படி ஒரு முயற்சி வெற்றி அடைஞ்சுதில அடுத்து இன்னும் ஏதாவது புதுசு பண்ணலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு ' என்றார்.

`வியாபார ரீதியில் படம் எப்படி ?'

`இதைத்தான் எழத்தாளர் ஜெயகாந்தனும் என்னிடம் கேட்டார்.`ஏம்பா, எனக்கு படம் பிடிச்சிருக்கு. அதனாலதான் பயமா இருக்கு. எனக்கு பிடிக்கிற படங்கள் வெற்றி பெர்றுவதில்லை. இந்த சினிமா எப்படி?' என்றார்.

`அது சித்தாள் வரைக்கும் படத்துக்கு வராங்க.( ஜெயகாந்தனின் மிகப்பிரபலமான நாவல் ` சினிமாவுக்கு போன சித்தாளு') என்று சொன்னேன். இந்த படம் கீழ இறங்காதுன்னு சொன்னாங்க. எனக்கு வர்ற தகவல் எல்லாம் எம்ஜிஆர் படம் பாக்க வர்ற மாதிரி வராங்கன்னு தகவல்'.

`முதல்ல இப்படி ஒரு படம் பண்ணனும்னு எங்க ஆரம்பிச்சது ?' இது நான்.

`வேட்டையாடு விளையாடு' முடிஞ்சதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது கெளதம் மேனன் ` பச்சைக்கிளி முத்துச்சரம்' கதையத்தான் எனக்கு சொன்னார்.எனக்கு
ஒத்துவராதுன்னு தோணிச்சு.உடனே ஏதாவது வித்யாசமா பண்ணலாமேன்னு, ` நவராத்திரி'யில சிவாஜி சார் பண்ணின மாதிரி, ஒன்பது வேடங்கள்னு பேச்சு ஆரம்பிச்சு, அப்புறம்தான் ஒரு படி மேலே போய பத்து வேடங்கள்ன்னு யோசிச்சப்பதான், ` இந்த `தசாவதாரம்' விஷயம் வந்தது'

`இந்த ரங்கராஜ நம்பி விஷயம்?'

`இந்த மோதல்கள் வரலாற்றில இருக்கு. அந்த காலத்தை களப்பிரர்கள் காலம்னு சொல்வாங்க. சரித்திரலேயே நடந்த மிகப்பெரிய இன ஒழிப்புன்னா அது சமண மதத்துக்கு நடந்த மாதிரி எப்போதுமே நடந்ததில்ல. அதற்கு பிறகுதான் பல விவகாரங்கள் முளைத்தது. அதற்கு முன்பு பிறாமணர்கள் புலால் சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. இந்த சுத்த சைவமெல்லாம், சமணர்களிடமிருந்ந்துதான் பிறாமணர்களுக்கு வந்தது.வரலாற்றை நல்ல படிச்சு பார்த்தா, ஆர்ய சத்ரியர்கள், ஆர்ய் சூத்திரர்கள் என்றெல்லாம் கூட பிரிவுகள் கூட இருந்தது. அப்போது வைணவர்கள், குறிப்பாக ராமாஜரின் சீடர்கள் வீரமாக இருந்திருக்காங்க. தங்களுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு மனித குலத்தில் சில மனிதர்கள் அவதாரம் எடுத்தாங்கன்னு சொல்ற மாதிரியான கதைதான். நாம் இன்றைக்கு பண்ற தவறுகள்தான் நாளைக்கு நம்மை வழி நடத்தும்.

அந்த ஆரம்ப காட்சியில் நீங்க `விஷ்ணு ஸகஸ்ரநாமம்' சொல்லும்போது, அது ஏதோ மனப்பாடம் பண்ணி சொன்ன மாதிரி இல்லையே ? தினமும் கோயிலுக்கு போகிற ஒரு தீவிர வைணவர் சொல்ற மாதிரி தானே இருந்தது.?

`ஆமாம், எனக்கு விஷணு ஸ்கஸ்ரநாமம் முழசா தெரியுமே' கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்.`சுப்ரபாதம் முழசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் `குணா' படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது. இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி.குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்'அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்.
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள்.அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.இப்படி ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்களில் பாதிப்புதான் அந்த பாத்திரம்.

`இந்த படத்தின் மூலமாக கடவுள் அவதாரம் இருக்குன்னு ஒத்துக்கிறீங்களா ?

`அது உங்க perception. அதுதான் படத்திலேயே சொல்லியிருக்கேனே. கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு. எனக்கு பல ஆன்மிகப் பெரியவர்கள் நல்ல தமிழ் கத்துக் கொடுத்திருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும். நான் சினிமாவில வளர்ந்துக்கிட்டுருக்கிற நேரம். வாரியார் சுவாமிகள் எங்கப்பாவுக்கு நல்ல நண்பர். பல சமயங்கள்ள எங்கப்பாவோடு அவருடைய காலட்சேபங்களுக்கு போயிருக்கேன். ஒரு நாள் தீடிர்ன்னு வாரியார் சுவாமிகள் என் வீட்டுக்கு வந்தார். `உனக்கு நம்பிக்கை இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முருகனுக்கு கோவில் கட்டறேன். நீ எனக்காக பணம் கொடுக்கணும்'னு சொன்னார். `நீங்க கேட்டா கொடுக்க ஆசைதான். ஆனால் பெரிய பணம் இப்ப இல்லையே' ன்னு சொன்னேன். `நீ எவ்வளவு வேணும்னாலும் கொடு' என்றார். அப்ப எனக்கு சம்பளமே 25 ஆயிரம்தான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்ப எங்கூட இருந்த பகுத்தறிவு நண்பர்கள் கூட எங்கிட்ட ` நீ யாருன்னு சொல்லு'ன்னு சண்டை போட்டாங்க.`நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்குங்க' அவர் கிட்ட நான் தமிழ் கத்துக்கிட்டேன்'ன்னு சொன்னேன். இப்படி எனக்கு தமிழ கத்துக்குடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் இந்த படத்தில் என்னால அசினுக்கு மங்களா சாசனம் சொல்லிக்கொடுக்க முடிஞ்சது. அவங்க மலையாளம் அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது.'

இப்படி பல விஷயங்களை சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் தெரியாத பல தொழில் நுட்ப கலைஞர்களுக்காக அவர் ஆங்கிலத்தில் எழதி வைத்திருந்த `தசாவதாரம்' திரைக்கதையை காட்டினார். அதை பார்க்கும்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு அதிக வேலையே இருந்திருக்காது என்பது புரிந்தது. ஒவ்வோரு அசைவையும் அவரே குறித்து வைத்திருந்தார். அடுத்த படமான `மர்மயோகி' முழ திரைக்கதையும் ஆங்கிலத்தில் தயாராக இருந்தார்.

என்னுடைய வாழ்க்கை லட்சியமே `THE DECLINE AND FALL OF ROMAN EMPIRE' எட்வர்ட் கிப்பன் எழதிய ஏழ வால்யூம்கள் என்னிடம் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதே போல் `THE RISE AND FALL OF THE THIRD REICH' BY WILLIAM SHEIRER. இதையும் தமிழில் கொண்டு வரவேண்டும். என்னுடைய இந்த ஆசை கமலுக்கும் தெரியும். இப்போது அதற்கு துணையாக பிஷருடைய புத்தகத்தையும் படிக்க சொன்னார். தான் தவில் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

தலைநிறைய பல விஷயங்களை அவரிடமிருந்து வாங்கி நிரப்பிக்கொண்டு திரும்பினோம்.

(நன்றி : எழுத்தாளர் சுதாங்கன்)

ஆஸ்கர் விருதுக்கு போன கமல் படங்கள்!


ஆஸ்கர் விருது என்பது ஹாலிவுட்காரர்களுக்கு மட்டுமே என்பது தெளிவாக எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆஸ்கர் விருதை அமெரிக்கர்கள் தவிர்த்து மற்றவர்கள் பெற முடியாது. ஹாலிவுட் நடிகரான மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகர் என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தியாவிலேயே இருந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தான் சிறந்த நடிகர்கள் என்ற அளவுகோல் பொய் என்பதற்காக இதை சொல்கிறோம்.

ஹாலிவுட் தவிர்த்து மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு ”சிறந்த அயல்நாட்டு மொழிப்படம்” என்றொரு விருதினை ஆஸ்கர் விருது கமிட்டிக்குழு வழங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகப் படங்களில் நடித்தவர் வேறு யார்? உலகநாயகன் கமல்ஹாசன் தான். 1985ஆம் ஆண்டு தான் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இந்த விருதுக்கு இந்தியா சார்பில் சென்றது. அது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, கே.விஸ்வநாதன் இயக்கிய "சுவாதி முத்யம்" என்ற தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படம் ஆஸ்கருக்கு சென்றது மட்டுமல்லாமல் அந்த ஆண்டின் ஆசியாவின் சிறந்த திரைப்படம், ஆசியாவின் சிறந்த நடிகர் விருதுகளையும் வென்றது.

அப்படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் நடித்த நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம் ஆகியப் படங்களும் இந்தியா சார்பில் அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள்.

வசனகர்த்தா கமல்

நடிகர் கமலுக்கு இணையாக என்னை கவர்ந்தவர் வசனகர்த்தா கமல். தேவர்மகன்,குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி மற்றும் தசாவதாரத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் எல்லாமே அருமை. அதிலும் தேவர்மகனில் எல்லாமே பஞ்ச் டயலாக்தான்

‘உனக்குள்ள நடமாடிக்கிட்டிருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கு எழுப்பிடாத’

நம்மள சுத்தி உள்ளவங்கள காப்பாத்தனும்னா நாம மொதோ தெம்பாயிருக்கணும்

அவன் மெதுவாத்தான் வருவான்

தேவனா இருக்கிறது முக்கியமா? மனுசனா இருக்கிறது முக்கியமா?

போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா

குருதிப்புனல்

நாம் இதை பிள்ளைங்களுக்கு கத்துக்கொடுக்கலைன்னா சாட்டிலைட் டிவி இதை தப்புத்தப்பா கத்துக்கொடுத்துரும் (1995- 96 ல் எழுதப்பட்டது)

எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு

வீரம்னா என்னான்னு தெரியுமா? பயமில்லாதது மாதிரி நடிக்கிறது


ஹேராம்

ஒநாயா இருந்து பார்த்தாத்தான் அதனொட நியாயம் தெரியும்


விருமாண்டி

ஒருத்தன் சந்தோஷமா இருக்கும் போது அதை உணர்றதில்ல.
(இது எனக்கு மிக மிக பிடித்த வசனம்)

நீங்கள்ளாம் மூணுசாமிய கும்பிடறவங்க. நான் ஐஞ்சு சாமிய கும்பிடறவன்

ஆசையால போர் போட்டு தண்ணிய உறிஞ்சிக்கிட்டே இருந்தா எப்படி?. அப்புறம் 100 200 அடின்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்
(இப்படம் முக்கிமாக சுற்றுச்சூழல் பிரச்சினையையே பேசியது)

மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்


தசாவதாரம்

பூமி ஒண்ணுதான் இதயும் அழிச்சுட்டீங்கன்னா அப்புறம் சந்திரனுக்கா போவீங்க

கடவுள் இல்லைன்னா சொன்னேன் இருந்திருந்தா நல்லாயிருக்கும்

உங்களுக்கு புரியுற பாஷையில இவர் சொல்வார், பணம்


மர்மயோகியிலும் இது போன்ற வசனங்களுக்காக காத்திருக்கிறோம்

சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும்!


உலகநாயகன் கமல் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரையுலகில் நுழைகிறார். கமலின் சில படங்களில் ரஜினி வில்லனாக நடித்து, தனது ஸ்டைலால் மக்களை கவர்ந்தார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினியின் டயலாக் டெலிவரி அனைவரையும் கவர்ந்தது.

வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி பைரவி படம் மூலமாக தமிழில் ஹீரோவாகவும் ஆனார். படத்தின் போஸ்டர்களில் முதன்முதலாக ‘சூப்பர் ஸ்டார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. அந்நேரத்தில் எஸ்.பி.முத்துராமனின் ஆடுபுலி ஆட்டம் படத்தில் கமல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லனாக ரஜினியை நடிக்கவைக்க எஸ்.பி.எம். நினைத்தார். ஹீரோவாகிவிட்ட ரஜினியிடம் எப்படி கேட்பது என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி எஸ்.பி.எம்.மை தொடர்புகொண்டு “நீங்க இயக்குற படம், என் நண்பன் கதாநாயகனா நடிக்கிற படம், நானில்லாமலா? படத்தை தொடங்குங்க சார்.. நடிச்சிக் கொடுக்கறேன்” என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். இதுதான் ரஜினி!

அதன்பின்னர் ரஜினியும், கமலும் இணைந்து சில படங்களில் நடித்தார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முடிந்த நேரம் அது. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு போய்விட்டார், சிவாஜி தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். இரு ஹீரோக்களின் வெற்றிடத்தை கமலும், ரஜினியும் சரியாக இட்டு நிரப்பினார்கள். இனிமேலும் தாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதுபோல சேர்ந்து நடிப்பது தனித்தனியாக இருவரின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்று முடிவு செய்தார்கள். எதிர்காலத்தில் தங்கள் இருவரில் யாராவது ஒருவர் தயாரித்தே மற்றவர் நடிக்க வேண்டும் என்றும் பேசி வைத்துக் கொண்டார்கள். இன்றுவரை அந்த வாய்ப்பு அமையவில்லை.

இருவரும் தனித்தனியாக நடிப்பது என்று முடிவெடுத்த பின்னும் ரஜினி கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு சின்ன காமெடி வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார். அது இருவரின் குருவான பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படம் ‘தில்லு முல்லு'. ரஜினி முதன்முறையாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம் அது.

பொதுவாக ரஜினி படம் ஓடும் நேரத்தில் கமல் படம் வெளியானால் அது தோல்வி அடையும் என்று ஒரு மூடநம்பிக்கை ரசிகர்களிடம் உண்டு. அது முற்றிலும் உண்மையல்ல. ராஜாதிராஜா வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது வெளியான அபூர்வசகோதரர்கள் வரலாற்று வெற்றி கண்டது. பாண்டியனோடு ஒரு தீபாவளிக்கு வெளியான தேவர்மகன் வெள்ளிவிழா கண்டது. பாபா படம் வெளியாவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக வெளியான பஞ்சதந்திரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடி வெற்றிவிழா கண்டது.

கமல் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர்களிடம் ரஜினி அடிக்கடி விசாரிப்பார். படம் தயாராக தயாராக அவ்வப்போது ‘ரஷ்' போட்டு பார்த்து மகிழ்வார். ரஜினியின் இந்த வழக்கம் தசாவதாரம் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘கல்லை மட்டும்' பாடல் தயாரானதுமே கே.எஸ்.ரவிக்குமார் முதலில் சொல்லி அனுப்பியது ரஜினிக்கு தான். எடிட்டிங் ரூமில் அப்பாடலை பார்த்த ரஜினி எழுந்து நின்று வெகுநேரம் கை தட்டினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.

கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பு தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக சிலாகிக்கப்படும் நாற்பதாண்டு காலநட்பு. அந்நட்புக்கு பிறகு அதிகம் பேசப்படும் மிக நீண்டகால நட்பு ரஜினி - கமல் இருவருக்குமிடையே இருப்பது தான்.

ம்ம்... நாம் ரஜினியிடம் காணும் பெருந்தன்மை பல நேரங்களில் அவரது ரசிகர்களிடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை!

உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!

சொந்த ஊர் - மானா மதுரை தாலுகா, பரமக்குடி

தந்தை பெயர் - வக்கீல் டி. ஸ்ரீனிவாசன்

பிறந்த தேதி - நவம்பர் 7ந் தேதி 1954

அண்ணன்கள் - சாருஹாசன், சந்துருஹாசன்

சகோதரி- நளினி

தனது 4 வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதியில் நடித்தார்.

கமலஹாசன் நடித்த முதல் நாடகம் - அப்பாவின் ஆசை

நடன அரங்கேற்றம் - 1968 ஆர்.ஆர். சபா

நடன ஆசிரியர் - என்.எஸ்.நடராஜன்

ஆரம்பம் முதலே கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

16 வயதினிலே - கிராமத்து சப்பானி வாபன்

ராஜ பார்வை - கண் தெரியாத குருடன் வேடம்

சலங்கை ஒலி - சிறந்த நடன கலைஞன்

சுவாதி முதியா(தெலுங்கு)-வெகுளி வேடம்

இந்தியன் - வயதான சுதந்திர போராட்ட கிழவர் வேடம்

அவ்வை சண்முகி - பெண் வேடம்

தசாவதாரம் - பத்து வேடங்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் கமலஹாசன் தனது புதிய படமான மருத நாயகத்திற்கு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுப்படம் இது.

(நன்றி : மாலைமலர்)

உலகநாயகன் - பயோடேட்டா

இயற்பெயர் :
கமலஹாசன்

முதல் படம் :
களத்தூர் கண்ணம்மா (1958)

முகவரி :
404, டி.டி.கே. ரோடு
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600018

விருதுகள் / பரிசுகள் :
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது-1990
தமிழக அரசின் கலைமாமணி விருது-1989
மூன்றாம் பிறை (1982), நாயகன் (1988) இந்தியன் (1996) ஆகிய படங்களுக்கு தேசிய விருது

கன்னியாகுமரி(மலையாளம்), ராஜ பார்வை(தமிழ்), அபூர்வ ராகங்கள்(தமிழ்), பதினாறு வயதினிலே(தமிழ்), சிவப்பு ரோஜாக்கள்(தமிழ்), யேதா(மலையாளம்), சகார சங்கமம்(தெலுங்கு), சாகர்(இந்தி), புஸ்பக்இந்தி) இவைகள் அனைத்தும் தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் சினிமா ரசிகர்கள் விருது பெற்றவை ஆகும்.

மொத்தப் படங்கள் :
200 க்கு மேல்

மொழிகள் :
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி

உலகநாயகன் நடித்தவற்றில் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் :
மேல்நாட்டு மருமகள்
மைக்கேல் மதன காமராஜன்
மோகம் முப்பது வருஷம்
மூன்றாம் பிறை
மைடியர் மார்த்தாண்டன்
ஆளவந்தான்
நாம் பிறந்த மண்
நான் அவனில்லை
நானும் ஒரு தொழிலாளி
நட்சத்திரம்
நம்மவர்
நண்பன்
நன்றி மீண்டும் வருக
நீலமலர்கள்
நீயா?
நினைத்தாலே இனிக்கும்
நிழல் நிஜமாகிறது
நூல் வேலி
நாயகன்
ஒரு கைதியின் டைரி
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
பாதகாணிக்கை
பார்த்தால் பசி தீரும்
பகடை பன்னிரெண்டு
பணத்துக்காக
பருவகாலம்
பருவ மழை
பசி
பட்டாம் பூச்சி
பட்டிக்காட்டு ராஜா
பேர்சொல்லும் பிள்ளை
பொய்க்கால் குதிரை
பேசும் படம்
புன்னகை மன்னன்
ராம் லட்சுமணன்
ராணி தேனீ
ராஜ பார்வை
சலங்கை ஒலி
சகலகலா வல்லவன்
சங்கர்லால்
சரணம் ஐயப்பா
சதிலீலாவதி
சத்யம்
சட்டம்
ஹேராம்
பம்மல் கே.சம்பந்தம்
குருதிப்புணல்
மூன்று முடிச்சு
அவர்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது
தப்புத்தாளங்கள்
அவள் அப்படித்தான்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
தில்லு முல்லு
சத்யா
தெனாலி
இந்தியன்
சூரசம்ஹாரம்
காதலா காதலா
16 வயதினிலே
ஆனந்த ஜோதி
அபூர்வ ராகங்கள்
அக்னி சாட்சி
அந்த ஒரு நிமிடம்
அன்னை வேளாங்கண்ணி
அந்தரங்கம்
அரங்கேற்றம்
அவள் ஒரு தொடர் கதை
அவ்வை சண்முகி
அழியாத கோலங்கள்
சினிமா பைத்தியம்
தேவர் மகன்
எல்லாம் இன்பமயம்
எனக்குள் ஒருவன்
ஏழாவது நாள்
குமாஸ்தாவின் மகள்
குரு
குணா
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
இரவில் ஒரு பகல்
ஜப்பானில் கல்யாணராமன்
காதல் பரிசு
காக்கி சட்டை
கடல் மீன்கள்
கலைஞன்
களத்தூர் கண்ணம்மா
கல்யாணராமன்
கல்யாண மாலை
கண்ணா நலமா
கன்னி வெற்றி
கப்பலோட்டிய தமிழன்
கோகிலா
குறத்தி மகன்
லலிதா
மாலை சூடவா
மாணவன்
மகளிர் மட்டும்
மகாநதி
மகராசன்
மனக்கணக்கு
மங்கள வாத்யம்
மங்கம்மா சபதம்
மன்மத லீலை
மீண்டும் கோகிலா
சட்டம் என் கையில்
சவால்
சிகப்பு ரோஜாக்கள்
சிம்லா ஸ்பெஷல்
சிங்கார வேலன்
சிவப்புக்கல் மூக்குத்தி
சொல்லத்தான் நினைக்கிறேன்
சிவரஞ்சனி
தாயில்லாமல் நானில்லை
தேன் சிந்துதே வானம்
தங்கத்திலே வைரம்
தூங்காதே தம்பி தூங்காதே
டிக்.டிக்.டிக்.
தாயில்லா பிள்ளை
உல்லாச பறவைகள்
உணர்ச்சிகள்
உன்னை சுற்றும் உலகம்
உன்னால் முடியும் தம்பி
உருவங்கள் மாறலாம்
உயர்ந்த உள்ளம்
உயர்ந்தவர்கள்
வானம்பாடி
வாழ்வே மாயம்
வறுமையின் நிறம் சிவப்பு
வெற்றி விழா
விக்ரம்
விரதம்
அன்பு தங்கை
ஆயிரத்தில் ஒருத்தி
குமார விஜயம்
இதய மலர்
சக்க போடு போடு ராஜா
நீதி தேவன் மயக்கம்
பாசவலை
பஞ்சதந்திரம்
அன்பே சிவம்
அபூர்வ சகோதரர்கள்
விருமாண்டி
மும்பை எக்ஸ்பிரஸ்
தசாவதாரம்

(நன்றி : மாலைமலர்)

உலகநாயகனின் கலையுலகப் பொன்விழா!


ஐம்பத்தி நான்கு வயதிலேயே தன்னுடைய கலையுலகப் பொன்விழாவை கொண்டாடிய உலகின் ஒரே நடிகன் உலகநாயகன் கமல்ஹாசனாக தானிருக்க முடியும். 1958ல் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது கலைப்பயணம் 2008ல் தசாவதாரத்தை தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உலகநாயகனின் கலையுலகப் பொன்விழாவை கொண்டாடும் வகையிலாக உலகநாயகனின் ரசிகர்கள் நடத்தும் உற்சாக வலைப்பூ இது.

நீங்களும் உலகநாயகனின் ரசிகராக இருக்கும்பட்சத்தில் இந்த வலைப்பூவில் இணைந்து உலகநாயகனின் புகழ்பாடலாம்.