Showing posts with label திரைப்படம் வசனம். Show all posts
Showing posts with label திரைப்படம் வசனம். Show all posts

ஓஷோவை ஆமோதிக்கிறாரா கமல்?

தசாவதாரம் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். மனிதன் மாதிரி ஒரு முறை அசை போடலாம் மாடு மாதிரி பலமுறை அசை போட்டால் நன்றாக இருக்காது. அதனால் இத்துடன் தசாவதார பதிவுகளை நிறுத்தி கொள்ளப் போகிறேன்

தசாவதாரம் படத்தில் மண்ணின் மைந்தனாக வரும் வின்செண்ட் என்னும் புரட்சி பாத்திரம் ஆதிக்க சக்தி மணற் கொள்ளையனிடம் தர்க்கம் செய்யும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. அப்போது இருவருக்கும் வாக்குவாதத்தின் போது மணற்கொள்ளையன் ஒத்த ஆளாக உலகை காப்பாற்ற நீ என்ன உலக நாயகனா என்று கேட்க அதற்கு அந்த புரட்சியாளன் ஆம் நான் உலக நாயகன் தான் ஏன் எல்லோருமே உலக நாயகன் தான். விந்துவில் உள்ள கோடிக்கணக்கான உயிரனுக்களில் ஒன்றில் இருந்த வந்த எல்லோருமே உலக நாயகன் தான் என்று பதில் அளிப்பார், இந்த புரட்சி பாத்திரத்துக்கு பன்றி அவதரத்தின் பெயரை வைத்தது அந்த பாத்திரத்தை களங்கப்படுத்துவதாக இருந்தாலும் இந்த உலக நாயகன் வசனத்தை சொல்ல வைத்ததன் மூலம் அந்த சறுக்கல் கொஞ்சம் சமன் செய்யப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

நமக்கும் ஆண்மீகத்துக்கும் கொஞ்சம் தூரம் தான். அப்பழுக்கில்லாத ஆண்மீக குருக்கள் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது அப்படி இருக்க விவகாரமான ஓஷோவை எல்லாம் அவ்வளவாக தெரியாது. நெருங்கிய நண்பரான பிரபல வலைப்பதிவர் தன் கணினியில் ஓஷோவின் பேச்சுகளை வைத்து இருக்கிறார். இது மாதிரி ஒரு சில சந்தர்பங்களில் ஓஷோவை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்போது தான் இந்த முதல் விந்து மேட்டர் பற்றி ஓஷோ சொன்னதாக நியாபகம். தசாவதாரம் மூலம் பல தரப்பட்ட ரசனைகளை கொடுத்த கலைஞானி ஓஷோவையும் விட்டு வைக்கவில்லை. ஆண்மீக குருவாக கருதப்பட்ட அவரின் கருத்துகளை சொன்னதன் மூலம் நான் ஏற்கனவே சொன்ன இரண்டும் கெட்டான் விஷயமும் இங்கே பொருந்தி வருகிறது

ரஜினி ரசிகர்களை கவரும் கமலின் கனவு பலிக்குமா

ஆஹா இவன் திருந்தவே மாட்டானா என்று நினைக்கிறீர்களா. ஸ்டார் போஸ்டில் தான் கும்மி அடிக்க கூடாது நமக்கு வேறு வழியா இல்லை. அதான் அங்கே பம்மி இங்கே கும்மி. தசாவதாரம் படத்தில் ஜப்பானிய பாத்திரத்தை கமல் வேண்டுமென்றே திணித்து இருக்கிறார். அந்த பாத்திரமே தேவை இல்லாதது. ரஜினிக்கு ஜப்பானில் உள்ள ரசிகர்கள் தானாக சேர்ந்த கூட்டம் அந்த கூட்டத்தை கலைக்க கமல் இப்படி எல்லாம் மெனக்கெட்டு ஜப்பான் மொழி பேசி குங்ஃபூ பைட்டு எல்லாம் போட வேண்டி இருக்கிறது. இது யார் சொல்லியது என்று நான் சொல்ல தேவை இல்லை

தசாவதாரம் படத்தை ஒரு ப்ளாட் மாதிரி கையாண்டு இருக்கிறார் கமல். அந்த பிளாட்டில் உள்ள முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போது ஒவ்வொரு பாத்திரமாக உள்ளே நுழைகிறார்கள். ஆனால் ஜப்பானிய பாத்திரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஜப்பானிய பாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சுனாமி வரும் போது மூன்று கமல்கள் மோதிக் கொள்வார்கள். சுனாமி தங்களை நோக்கி வரும் போது பிளட்சர் கமலும் விஞ்ஞானி கமலும் எதுவுமே புரியாமல் நிற்க ஜப்பானிய கமலோ சுனாமி இஸ் பேக் என்று சொல்லுவார். இந்த இடத்தில் தான் கமலுக்குள் இருக்கும் பெர்ஃப்க்ஷனிஸ்ட் வெளிப்படுகிறார்

சுனாமி பற்றிய அந்த வசனத்தை கமல் மற்ற ஒரு கமலை வைத்து சொல்லி இருக்கலாம் அல்லது ஜப்பானிய கமலே ஓ மை காட் திஸ் இஸ் சுனாமி என்று சொல்ல வைத்து இருக்கலாம். ஆனால் அவரோ சுனாமி இஸ் பேக் என்று சொல்கிறார் ஏனென்றால் ஜப்பானியகளுக்கு தான் சுனாமி நமக்கு எல்லாம் முன்பே அறிமுகம். பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளதாம். சுனாமி என்ற பெயரே கூட ஜப்பானிய பெயர் தானாம். இப்போது சொல்லுங்கள் அந்த பாத்திரம் திணிக்கப்பட்டதா என்று

தசாவதாரம் பதிவுகள் அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா. நாளை வேறு ஒரு மேட்டருடன் சந்திப்போம்

வசனகர்த்தா கமல்

நடிகர் கமலுக்கு இணையாக என்னை கவர்ந்தவர் வசனகர்த்தா கமல். தேவர்மகன்,குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி மற்றும் தசாவதாரத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் எல்லாமே அருமை. அதிலும் தேவர்மகனில் எல்லாமே பஞ்ச் டயலாக்தான்

‘உனக்குள்ள நடமாடிக்கிட்டிருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கு எழுப்பிடாத’

நம்மள சுத்தி உள்ளவங்கள காப்பாத்தனும்னா நாம மொதோ தெம்பாயிருக்கணும்

அவன் மெதுவாத்தான் வருவான்

தேவனா இருக்கிறது முக்கியமா? மனுசனா இருக்கிறது முக்கியமா?

போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா

குருதிப்புனல்

நாம் இதை பிள்ளைங்களுக்கு கத்துக்கொடுக்கலைன்னா சாட்டிலைட் டிவி இதை தப்புத்தப்பா கத்துக்கொடுத்துரும் (1995- 96 ல் எழுதப்பட்டது)

எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு

வீரம்னா என்னான்னு தெரியுமா? பயமில்லாதது மாதிரி நடிக்கிறது


ஹேராம்

ஒநாயா இருந்து பார்த்தாத்தான் அதனொட நியாயம் தெரியும்


விருமாண்டி

ஒருத்தன் சந்தோஷமா இருக்கும் போது அதை உணர்றதில்ல.
(இது எனக்கு மிக மிக பிடித்த வசனம்)

நீங்கள்ளாம் மூணுசாமிய கும்பிடறவங்க. நான் ஐஞ்சு சாமிய கும்பிடறவன்

ஆசையால போர் போட்டு தண்ணிய உறிஞ்சிக்கிட்டே இருந்தா எப்படி?. அப்புறம் 100 200 அடின்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்
(இப்படம் முக்கிமாக சுற்றுச்சூழல் பிரச்சினையையே பேசியது)

மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்


தசாவதாரம்

பூமி ஒண்ணுதான் இதயும் அழிச்சுட்டீங்கன்னா அப்புறம் சந்திரனுக்கா போவீங்க

கடவுள் இல்லைன்னா சொன்னேன் இருந்திருந்தா நல்லாயிருக்கும்

உங்களுக்கு புரியுற பாஷையில இவர் சொல்வார், பணம்


மர்மயோகியிலும் இது போன்ற வசனங்களுக்காக காத்திருக்கிறோம்