Showing posts with label தசாவதாரம். Show all posts
Showing posts with label தசாவதாரம். Show all posts

விருதுகளைக் குவித்த உலக நாயகன்

தசாவதாரம் படத்துக்காக சிறந்த மக்கள் அபிமான ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் திரைக் கதையாசிரியர் என 4 விருதுகளை கமல்ஹாசனுக்கு வழங்கியது விஜய் டிவி.



விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.

2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் நேற்று வழங்கப்பட்டன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும், பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன. 4 விருதுகளையும் மகிழ்ச்சியுடன் கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

ஒரு ஹீரோ, ஒரே படத்திற்காக ஹீரோ, வில்லன் மற்றும் காமெடியனுக்கான விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



விழாவில் கமலஹாசன் பேசும்போது, 'நான் முதன் முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன் ஆனேன். இந்த வகையில் எனக்கு விலலன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.

காமெடியை நான் பாலச்சந்தரிடமிருந்தும், நாகேஷிடமிருந்தும் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் காமெடிக்கான இந்தவிருதினை நாகேஷுக்கும், சக காமெடி கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன், என்றார்.

இந்நிகழ்ச்சியில் கமலைப் பற்றி நடிகர் சிவகுமார் பேசியதும் அவரின் மகன் சூரியாவை உலக நாயகன் பாராட்டிப் பேசியது நிகழ்ச்சியின் ஹைலைட். மேடையில் உலக நாயகனின் ஆசிர்வாதத்தை நெடுஞ்சாண் கிடையாக சூரியா பெற்ற காட்சி பலரையும் நெகிழச் செய்தது.

இந்த நிகழ்ச்சியை எதிர்வரும் 18, 19 திகதிகளில் இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

2008 அதிகம் தேடப்பட்ட "தசாவதாரம்"

தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது.
கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில்.

Most Popular Movies

1. Jodha Akbar
2. Dasavatharam
3. Singh Is King
4. Jaane Tu Ya Jaane Na
5. Jannat
6. Tashan
7. Ganesha
8. Fashion
9. Rock On
10. Race

# Bollywood is the king in India! It’s interesting to see that audience interest is going beyond song and dance sequences.

# Noteworthy is the # 2 slot retained by Tamil cinema.

Source: http://www.google.co.in/press/pressrel/20081210_zeitgeist2008.html

இதற்கு மேலும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா நம் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை நிரூபிக்க?

-ஸ்ரீ.

உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு











இன்றைக்கு தசாவதாரம் 100வது நாள்.


பட உதவி : தினத்தந்தி.

தசாவதாரமும் ‍ தரம் தாழ்ந்த விமர்சனங்களும்

அப்படி என்னதான் கமல் மீதும், அவரது படங்களின் மீதும் கோபமோ? தங்களின் இஷ்டத்திற்க்கு வசைபாடுகின்றார்கள். இதை ஏன் செய்யவில்லை, அதை ஏன் செய்தார், அது எப்படி அப்படி வரலாம், இது ஏன் இப்படி வரவில்லை, இதுவா உலகத்தரம்...

1. முதல் கேள்வி தமிழே தெரியாத ஜாக்கிஜானை ஏன் பாடல் வெளியிட்டு விழாவிற்க்கு அழைக்க வேண்டும்?

ஜாக்கிஜான் திரைப்ப‌ட‌த்துறையினைச் சார்ந்த‌வ‌ர்தானே, த‌னது துறையைச் சார்ந்த ஒருவ‌ரைத்தான் க‌ம‌ல் அழைத்துள்ளார். சினிமா என்ப‌து ஒரு தொழில் அதிலும் லாப‌ம் வேண்டும் இல்லை என்றால் அதனைச் சார்ந்துள்ள‌வர்க‌ள் உண‌விற்க்கு எங்கு போவது? உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ ஒரு ந‌ப‌ரை அழைத்தால் த‌ன‌து ப‌ட‌த்திற்க்கு ஒரு உலக‌ளாவிய‌ முக‌வ‌ரி கிடைக்கும், அந்த‌ திரைப் ப‌ட‌த்தினை உலகம் முழுவது எடுத்துச் செல்ல‌ ஜாக்கிஜான் வழிவ‌குப்பார் என்ப‌த‌னால் அழைத்துதிருக்க‌லாம். ஒலிம்பிக் டார்ச்சை விளையாட்டு வீர‌ர்க‌ளின் கைக‌ளில் கொடுக்காம‌ல், ந‌டிகைக‌ளிட‌ம் கொடுத்து ஜொள்ளுவிடும் அர‌சிய‌வாதிக‌ளைப் ப‌ற்றி எழுதி இருந்தால் ந‌ன்றாக இருந்திருக்கும்.

2. ப‌த்து வேட‌ச் சாத‌னைக்காக‌ ம‌ட்டுமே இந்த‌ப் ப‌ட‌ம்/ ஏன் ப‌த்து வேட‌ங்க‌ளிலும் க‌ம‌ல் ம‌ட்டுமே ந‌டிக்க‌ வேண்டும்?

ச‌ரிதான் இது சாத‌னைக்காக‌வே எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் தான், ஏன் சாத‌னைக‌ள் முறிய‌டிக்க‌ப் ப‌ட‌க்கூடாதா? இதைவிட‌ ஒரு ந‌ல்ல‌ திரைக்கதை(முடிந்தால்?) அமைத்து அதில் பதினோறு வேடங்களில் விக்ர‌மோ, சூரியாவோ ந‌டித்தால் க‌ம‌ல் என்ன‌ த‌டுத்து விட‌வா போகிறார்? ப‌த்து வேட‌ங்க‌ளிலும் புக‌ழ் பெற்ற‌ ந‌டிக‌ர்க‌ளை ந‌டிக்க‌ வைத்திருந்தால் த‌யாரிப்பாள‌ர் பாடு பெரும்பாடாகியிருக்கும்.

3.ப‌ட‌ம் முழுவ‌து ஆங்கில‌ வாடை.

பின்ன‌ர் புஷ், பிள‌ச்ச‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் த‌மிழிலா பேச‌ முடியும்? அப்ப‌டி பேசி இருந்தால் க‌ம‌லுக்கு அறிவே இல்லை எப்ப‌டி ஆங்கில‌க்கார‌ர்க‌ள் த‌மிழில் பேச‌ முடியும் என‌க் கூறி ஒரு கூட்ட‌மே கிள‌ப்பி இருக்கும்.

4.ஒரு அன்பர் ப‌ர‌த், கோவை குணா போன்றவர்களை க‌ம‌லுட‌ன் ஒப்பிட்டு இருக்கிறார்.

ந‌ல்ல‌வேளை அந்த அன்பர் இன்னும் போக்கிரி ப‌ட‌ம் பார்க்க‌வில்லை என நினைக்கிறேன் இல்லையென்றால் அதில் சுற்றும் விழிச் சுட‌ரே பாட‌லுக்கு வ‌டிவேலு ஆடுவதைப் பார்த்து பேசாம‌ல் அவ‌ரையே க‌ஜினியில் ந‌டிக்க‌வைத்திருக்க‌லாம் என‌க் கூட‌ கூறி இருப்பார். ஒரு க‌தாப்பாத்திர‌த்தை ஏற்று ந‌டிக்கும் போது அதை போல‌வே தான் ந‌டிக்க‌ வேண்டும். நல்லவேளை க‌ம‌ல் தமிழ் தெரிந்த தெலுங்குக்கார‌ர் போல் மிமிக்கிரி செய்கிறார், விஞ்ஞானி போல் மிமிக்கி‌ரி செய்கிறார் என‌ குற்ற‌ம் சாட்டாம‌ல் விட்டன‌ரே அதுவ‌ரை ச‌ந்தோச‌ம்.

5. ப‌ட‌ம் முழுவ‌து ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கும் மேக்க‌ப்.

என‌க்கு தெரிந்த‌ ப‌ல‌ உல‌க‌த்த‌ர‌மான‌ ஆங்கில‌ ம‌ற்றும் ப‌ல‌ மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் மேக்க‌ப் பூச‌ப்ப‌ட்ட‌து ந‌ன்றாகத் தெரிய‌த்தான் செய்கிற‌து. ப‌ட‌ங்க‌ளில் ய‌தார்த‌ம் என்ப‌து ஒரு அள‌விற்க்குத் தான் இருக்கும். அதையும் தாண்டி அது ர‌சிக்கும்ப‌டியாக‌ இருக்கிற‌தா என்ப‌து தான் கேள்வி. அதில் நிச்ச‌ய‌ம் த‌சாவ‌தார‌ம் வெற்றி பொற்ற‌தாகும்.

6.ஜ‌ப்பானிய‌ ர‌சிக‌ர்களைக் க‌வ‌ர‌ க‌ம‌ல் முய‌ற்சிக்கிறார்?

இந்த‌ மாதிரி ஒரு ஐடியா க‌ம‌லுக்கு முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் ப‌ல‌ நாட்ட‌வரைக் க‌வ‌ர‌ ஒரு இருப‌து பாத்திர‌ங்க‌ளை உருவாக்கி அதிலும் ந‌டித்திருப்பார். ந‌ல்ல‌வேளை அமெரிக்க‌ அர‌சிய‌லில் க‌ம‌ல் அடியெடுத்து வைக்கும் முய‌ற்சி தான் புஷ் வேட‌ம் என‌ காம‌டி ப‌ண்ணாம‌ல் விட்ட‌ன‌ரே.

க‌டைசியாக‌ க‌ம‌லுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் பெண்வேட‌மிட்டு ந‌டிக்காதீர், ஏனென்றால் அந்த‌ பெண் மார்பில் இருந்து ஏன் பால் வ‌ர‌வில்லை என‌க் கூட‌ கேள்வி வ‌ர‌லாம்

கொசுருச் செய்திக‌ள்:

1.த‌சாவ‌தார‌ம் அமெரிக்காவில் நாற்ப‌து பிரிண்டுக‌ளாக வெளியிட‌ப்ப‌ட்ட‌ முத‌ல் தென் இந்தியத் திரைப்ப‌டம்.
2. அமெரிக்காவில் த‌மிழில் ம‌ட்டும் 30 ந‌க‌ர‌ங்க‌ளில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
3. திரையிட்ட‌ மூன்று வார‌ங்க‌ளுக்குள் நூறு கோடி மேல் வ‌சூல் கிடைக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

தசாவதாரம் சார்ந்த மலிவு விளம்பரங்கள்

தசாவதாரம் ஒரு பார்ப்பனீய மலம், கமலின் பிராமணிய முகம், தசாவதாரம் கமலின் மாஸ்டர்பேஷன் போன்ற தசாவதாரம் சம்மந்தமான எதிர்மறை விமர்சனங்களை படித்து ரசித்து இருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யும் நோக்கோடு எழுதுபவர்கள். தாங்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமான வாதங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். இது போன்ற கூர்மையான ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் கமல் போன்ற கலைஞனை மெருகேற்றி வருகின்றன. இதே மாதிரி கமல் தசாவதாரத்தில் பெரும்பாண்மை மதத்தை கிண்டல் பண்ணுகிறார் ஆனால் சிறுபாண்மை மதங்களை ஆதரிக்கிறார் என்று மற்றொரு தரப்பு சொல்கிறது. இது போன்றவர்களுக்கு ஒவ்வொரு கமல் ரசிகனும் பதில் சொல்லியே ஆக வேண்டும்

இன்னொரு வகை விமர்சகர்கள் என்னை போன்றவர்கள். எதனால் தங்களுக்கு தசாவதாரம் பிடித்து இருக்கிறது என்று அதற்கான வாதங்களை முன் வைத்து எழுதுகிறோம். ஆனால் இப்படி எந்த வாதத்தையும் முன் வைக்காமல் தசாவதாரம் ஒரு குப்பை என்று போகிற போக்கில் ஒரு மூத்த வலைப்பதிவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தையும் அவர் பாணியில் மொக்கை என்று கூறி ஒதுக்கிவிட முடியும் ஆனால் அப்படி செய்து அவருகும் நமக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்ட விரும்பவில்லை. அவர் படம் பற்றி பெரிதாக எதுவும் குறை கூறாததால் எனக்கும் அதற்கான பதில்கள் இல்லை. ஆனால் அவர் பதிவு மற்றும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அவருடைய பதிவு மலிவு விளம்பரம் தேடும் ஒரு யுக்தி என்று மட்டும் புரிகிறது

அவருடைய முதல் பின்னூட்டத்திலேயே தசாவதாரம் அடிபொடிகள் வந்து தன்னை கும்முவார்கள் என்று எதிர்பார்த்து காத்து கிடப்பதாக சொல்லி இருக்கிறார். இதிலி இருந்தே தெரிகிறது அவருடைய மனோபாவம். அடுத்து சொல்கிறார் யாரும் சுப்பிரமணியபுரம் பற்றி பேசவில்லை அப்பவும் தசாவதாரம் தான் பெருசாக தெரிகிறது என்று. சுப்பிரமணியபுரம் பற்றி பின்னூட்டம் வர வேண்டுமானால் அதை பற்றி மட்டும் எழுதி இருக்கலாம் ஆனால் மலிவு விளம்பரம் வேண்டி தானே தசாவதாரத்தையும் தன் பதிவில் இணைத்தார்

சந்திரமுகி அந்நியன் போன்ற படங்கள் உளவியல் சம்மந்தமான கருவை கொண்டு வெளிவந்த படங்கள் அதனால் அவை இரண்டையும் கம்பேர் பண்ணி எழுதலாம் ஆனால் இவர் சுப்பிரமணியபுரம் படத்தையும் தசாவதாரத்தையும் கம்பேர் பண்ணியதில் எந்த விவாத நோக்கமும் தெரியவில்லை. ஆனால் அவருடைய நோக்கம் மட்டும் நிறைவேறி இருக்கிறது

சாதித்த தசாவதாரம் - ‍ நக்கீரன்

கமல், கே.எஸ்.ரவிகுமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த மூன்று தமிழர்களின் கூட்டணியில் மிகப்பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது தசாவதாரம். இந்தப்படத்தில் கமல் மாறுபட்ட பத்து கெட்டப்புகளில் தோன்றி திரை ரசிகர்களை உள்ளபடியே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கிராபிக்ஸ்சின் தோழமையோடு இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் டெக்னிக்கல் உத்திகளும் காட்சியமைப்புகளும் கோலிவுட் தரப்பையே உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது படங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் கமல் சில படங்களில் கமர்ஷியல் ரீதியான வெற்றிக்கோட்டைத் தொடமுடியாமல் போனதும் உண்டு.

தமிழர்களின் இந்தக் கடுமையான தசாவதார உழைப்பிற்க்கு உரிய வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறதா? வசூல் எப்படி? என்பதை அறிய களம் இறங்கினோம்.

முதலில் தசாவதாரத்தை உருவாக்க கோடிக்கணக்கில் கரன்ஸிகளை இறைத்திருகும் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை சந்தித்தபோது உற்சாகமாகப் பேச ஆரம்பித்த அவர். " தமிழ் நாட்டில் மட்டும் தினசரி 1250 காட்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு, அதோட இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஸ்ரீ லங்கா, பிரான்ஸ், அமெரிக்கா, நார்வே இப்படிப் பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலுமா 1755 காட்சிகளும் ஓடிக்கிட்டு இருக்கு ஆக தினசரி 3000 காட்சிகள் உலகம் முழுக்க ஹவுஸ்புல்லாக ஓடுவதால் நாங்கள் வசூல் கடலில் திக்குமுக்காடிக்கிட்டு இருக்கோம், எங்களைப் பொறுத்தவரை கமல் சாதனை நாயகனாக மட்டுமல்ல வசூல் நாயகனாகவும் இருக்கிறார்" எனப் புல்லரித்தபடி பேசினார்.

இவர் சொல்வது சரிதானா? சென்னை சத்யம் தியேட்டர் மேலாளரான கண்ணையாவிடமே கேட்டோம் "ஆமாங்க எங்க தியேட்டரின் 40 வருட வரலாற்றில் 14 நாள்ல 90 லட்ச ரூபாய்க்கு மேல வசூல் செய்த வசூலான ஒரே படம் தசாவதாரம் மட்டும்தாங்க" என்கிறார் அவரும் உற்சாகமாக.

மாயாஜால் திரையரங்க மேலாளர் மீனாட்சி சுந்தரமோ, "ரஜனியின் சிவாஜி படம் 118 நாள் ஓடி ஒரு கோடியே 12 லட்சத்தை வசூலித்தது ஆனா தசாவதாரமோ 17 நாள்லேயே 92 லட்ச ரூபாயத் வசூலாக குவிச்சிருக்கு. வொர்க்கிங்ஸ் டேஸ்ல கூட கூட்டம் குறையல இது உலக சாதனைதான்" என அவரும் தன் பங்கிற்க்கு சிலாகித்தார்.

தசாவதார விநியோகஸ்தர்களில் ஒருவரான பாண்டிச்சேரி கண்ணனோ, "ரொம்ப காலமாக சினிமாமேல வெறுப்பில இருந்த வயதான பெண்களும் ஆச்சாரமான பெண்களும் இந்தப் படத்துக்கு வர்தறைப் பார்க்கமுடியுது. அதேபோல் பொதுவாக கமல் படத்துக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரமாட்டாங்க ஆனா இதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வர்றதையும் காணமுடியுது. பகுத்தறிவு பேசும் கமல் இதில் ஆன்மிகமும் பேசியிருப்பதால்தான் பெண்கள் கூட்டம் அதிகமாக வருது" என தன் கணிப்பையும் அவர் சொல்ல

"சிவாஜி" படம் நஸ்டம் என்று கோர்ட்டுக்குப்போனவராச்சே நீங்க ரஜனி மீதான அந்தக் கோபத்தில்தான் இப்ப கமலைத் தூக்குறீங்களா? என அவரை நாம் கலாய்க்க "அப்படியில்லீங்க சிவாஜி பட விசயத்தில் நாங்க நஸ்டப்பட்டதும் உண்மை, இப்ப லாபம் பார்க்கிறது உண்மை" என்றார் சீரியசாகவே.

மற்ற மாநிலங்களின் பல்ஸ் ரேட்? கேரளா எந்தா பரயுன்னு? விநியோகஸ்தர் ஹென்றியைக் கேட்டோம் அவரோ, " நான் பரயுறதைவிட திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் முதலாளி கிரிஷ் சந்திரன் கிட்ட பேசுங்க" என்று அவரைக் கைகாட்டினார். கிரிஷ் சந்திரனோ "இவிட மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு வல்லிய ஓபனிங் கண்டதில்லை. ஈ ஸ்டேட்ல 82 தியேட்டர்ல படம் ரிலீசாகிட்டிருக்கு. மேக்கொண்டு 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க. இந்த மழைக்காலத்திலும் கூட்டம் நிறைய வருது. மொத்தத்தில் சாரே படம் பிரமாதமாக்கும்" என்றார் பூரித்தபடி.

ஆந்திரா ஏமி செப்புதுன்னாதி? விநியோகஸ்தர் சோபாவிடம் நாம் மாட்லாடியபோது "எங்க சூப்பர் ஸ்ரார் சிரஞ்சீவியோட தாகூர் படத்தின் வசூல் 25 கோடி ரூபா. இந்த பிரேக்கை தசாவதாரம் உடைச்சிடும்போலிருக்கு. இதன் மெகா ஹிட்டைப்பார்த்து இங்க பல ஹிரோக்கள் தங்கள் பட ரீலீசை தள்ளிவைச்சிட்டாங்க. ஒரு சாதரண ரசிகையாக இருந்துசொல்றேன் பல்ராம் நாயுடு கேரக்டரை எங்க ஜனங்க ரொம்ப ரசிக்கிறாங்க. அந்த கிழவி கேரக்டரையும் பெண்கள் சிலாகிக்கிறாங்க. சுனாமி காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் பிரமாண்டம் கூட ரசிகர்களைப் பிரமிக்கவைக்குது ஒட்டுமொத்ததில் ஆந்திராவே கமலை ஆராதிக்குது" என்கிறார் உணர்ச்சிமயமாய்.

வாட்ஸ் அப் இன் அமெரிக்கா? விநியோகஸ்தர் ஜெயவேல் முருகனோ " யு.எஸ்.ஏவில் ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீசான படம் இதாத்தான் இருக்கும் இவ்வளவு பிரமாண்டமாக ஒரு தமிழ்ப்படமா என்று அமெரிக்காரர்களே வியக்கிறாங்க. கமலின் பத்து கெட்டப்பும் அவங்களைப் பிரமிக்க வைக்கிறது. அவங்க உணர்ச்சிவசப்பட்டு எங்க கைகளை குலுக்கிப்பாராட்டுகிறாங்க. கமலின் இந்த தசாவதார சூறாவளியில் அமிதாப்பின் சர்க்கார் ராஜ் படம்கூட ஆட்டம் கண்டிருக்கு. மொத்தத்தில் தசாவதாரம் எல்லா வகையிலும் பிரமிப்பு" என்றார் பலத்த சிரிப்போடு.

நார்த் இண்டியா கியா கேத்தா ஹே? இந்தி டப்பிங்கில் 400 காப்பிகள் ரெடியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பாலிவுட்காரர்களுக்கு இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தசாவதாரத்திற்க்காய் தவமிருக்கிறார்கள்.

உலகநாயகனான கமல் இந்தப்படத்தின் மூலம் இன்றைய தேதிக்கு இவரே என்று சொல்லும் அளவிற்கு கலெக்சன் நாயகனாக பதினோராவது அவதாரம் எடுத்திருக்கிறார். மொத்தத்தில் தமிழர்களின் இந்தத் திரைக்கூட்டணி உலக அளவில் மெஹா வெற்றியை தொட்டுக்கொண்டிருப்பதற்காக நாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

இரா.த.சக்திவேல்
நக்கீரன் 09.07.2008

டிஸ்கி : சாதித்ததா தசாவதாரம் என்பதுதான் நக்கீரனின் தலைப்பு. அதனை சாதித்த தசாவதாரம் என சற்று மாற்றி அமைத்துள்ளேன். காரணம் தலைப்பு எதிர்மறையாக இருப்பதுபோல் தோன்றியது. உலகநாயகன் கமல் வசூல்ராஜாவாக இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.